Tuesday, September 29, 2009

வாரணம் ஆயிரம் - அனல் மேலே பனித்துளி

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: தாமரை

ஆகாய வெண்ணிலாவே...

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

(ஆகாய வெண்ணிலாவே)


ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

( ஆகாய வெண்ணிலாவே )


பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

(ஆகாய வெண்ணிலாவே)


படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்

நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்..

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

.......... நிற்பதுவே நடப்பதுவே .........

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

.......... நிற்பதுவே நடப்பதுவே .........

வரிகள் : பாரதியார்
இசை : இளையராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்திரா

ஜூன் போனால் ஜூலை காற்றே...

ஜூன் போனால் ஜூலை காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!

ஆரைக்குள்ளே மழை வருமா?
வெளியே வா குதூகலமா!
இந்த பூமிப் பந்து, எங்கள் கூடைப் பந்து!
அந்த வானம் வந்து, கூரை செய்ததின்று!
கறை இருக்கும் நிலவினை சலவை செய்!
சிறையிருக்கும் மனங்களைப் பறவை செய்!
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

இருப்போமா வெளிப்படையாய்?
சிரிப்போமா மனதுடையாய்?
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே!
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே!
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்,
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்,
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: அருண், க்ரீஷ்

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே.....

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,
தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!
நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.
கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,
மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.
சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,
எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிணி, கார்த்திக், க்ரீஷ்

நினைத்து நினைத்து....

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்பிடி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்பிடி சொல்லுவேன்?
உடைந்து போன வளையலின் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே!

(நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.

(நினைத்து)

படம்:- 7/G ரெயின்போ காலனி
இசை:- யுவன் சங்கர்ராஜா
பாடல்:- நா.முத்துக்குமார்

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

படம் : படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து

காதலில் விழுந்தேன் - தோழியா என் காதலியா

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்

நிலா காய்கிறது.....

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து

Where is the party - சிலம்பாட்டம்

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

Saturday nightன்னா clubbingதானே
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா
என்னதான் லைஃபு இது
எஞ்சாய் பண்ற வயசு இது
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

(இன்னாம்மா..)

Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ எங்க வூட்ல
Where is the party tonight..
நடு ரோட்லம்மா..
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..

இன்னாப்பா இது கொட்ஷலா கிது
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது

தே நீ ஒன்னும் கவலப்படாத
நம்ம ஆடுனா
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
பொண்ணை குத்தம் சொல்லாத
சந்தோஷத்தைக் கொல்லாத

Where is the party
அ ஒங்க வூட்ல பார்ட்டி
Where is the partyt..
அ நம்ம வூட்ல பார்ட்டி
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ நடு ரோட்ல
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
(இன்னாம்மா..)

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி

உசேலே உசேலே....

உசேலே உசேலே...

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
மாட்டு மணிச் சத்தம்
மல்லிகைப்பூவாசம்
கைத்தறி கண்காட்சி
சந்தக் கடைவீதி
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

பூ உண்டு பூ உண்டு ஆளான பெண் உண்டு
பூ சூடும் பெண் இல்ல ஃபாரினுல
பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி
பார்த்துட்டே வாழலாம் நம்மூருல
நம்மோட நெழலும் தான் சாலை மேல் விழுதுன்னா
அபராதம் கேக்குறான் ஃபாரினுலே
தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
கேட்பாரே இல்லயே நம்மூரூல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

நம்மூரு வண்டி வச்சு வண்டி பூரா உட்கார்ந்து
உண்ணும் சுகம் அடடா
வேகாத ரொட்டி வெச்சு வேளைக்கு ரெண்டு
திண்பான் ஃபாரினுல ஐயையோ
ஆண்டிப்பட்டியில் சேவல் சண்டைக்கு
ஃபாக்ஸிங் ஈடில்லையே

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

சைக்கிள் பெல்லின் சங்கீதம்
மொட்டைமாடி காற்றாடி
ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்பம் இன்பம்
கம்புச்சண்டை கரகாட்டம்
கோயில் குளம் கற்பூரம்
பொங்கல் தல தீபாவளி இன்பம் இன்பம்
தண்ணிக் கொடம் சண்டையும்
பானை மோரும் பண்ணீரும்
ஜன்னலில்லா பேருந்தும் இன்பம் இன்பம்

தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
எங்கும் பச்சைப்பசேலே

உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே...
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல

ஆல்பம் : உசேலே
பாடல் : உசேலே உசேலே
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், டிம்மி, கார்த்திக் & திப்பு
பாடல் வரிகள் : பா.விஜய்

காதல் ரோஜாவே......

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில்,
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால்,
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில்,
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

வீசுகின்ற தென்றலே!
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா!
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே!
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே!
புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

முதல் நாள் இன்று.....

ஆண்:
முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று
வேராக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண்:
என், உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்றுக் கொண்டது
நில் என்றால், சட்டென்று, நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
ஓஹோ, ஜானி ஜான்ன்ன்ன்...

ஆண்:
[முதல் நாள்...]

பெண்:
இசை தாகம் தருகின்ற ஒன்றை
உயிர்போலே காதல் மேகம் என்னை
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்

ஆண்:
முழுதாக முழுகவும் இல்லை
முழுகாமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல், எழுந்தவர் கானும் என்னை
ஓஹூ ஹூ வோஹ் வோஹ்.
வெகு தூரம், வந்தேன்
காதல், கிருமிகள் நெருங்காமல்

பெண்:
முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில், காதல் விதை தூவு
இல்லை எனில் நீ தன்னம் தனி தீவு
வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு
ஓஹொஹொஹ்..

ஆண்:
உதட்டாலே, காதல் என்னும் சொல்லை
உரைத்தாலே, கூட வரும் தொல்லை
வாழும் மட்டும், விழிகளில் தூக்கம் கெடும்

பெண்:
ஆஹ் ஹஹ் ஹாஹஹா ஓஹ் வோஹ்..
சுகம் ஏது, வாழ்வில்
காதல், வலியை சுமக்காமல்

ஆண்:
[முதல் நாள்...]

உப்புக்கள் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்
ஓஓ டொரியே ஏய்!
ஓ சன சோனா
ஓ சன சோனா
ஓ சன சோனா
ஓ சன சோனா...

விரும்பிக் கேட்டவர்: உதயா

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: K.K, மஹாலஷ்மி
பாடலாசிரியர்: பா.விஜய்

மனசே மனசே மனசில் பாரம்...

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
(மனசே..)

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம்இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே
(மனசே..)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பறிமாரினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
(மனசே..)

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே..
(மனசே..)


படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல......

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

(ஒண்ணுக்குள்ள ஒண்ணா)

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே!!

திரைப்படம் :வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரசன்னா
இசையமைத்தவர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் :தாமரை

பூங்காற்று புதிதானது...

பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

(பூங்காற்று புதிதானது)


வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழி பேசும்
பூவானில் பொன்மேகமும் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

(பூங்காற்று புதிதானது)

நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி
நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ

(பூங்காற்று புதிதானது)


படம்: மூன்றாம் பிறை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

இளமை இதோ இதோ...

ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)


இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே
ஏன்டி நீ பார்த்தியே
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கன்னம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)


கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்கின்ற ஆளேது
யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)



படம் : சகலகலா வல்லவன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பால்சுப்ரமணியம்

ஈரம் - சாரல் ஏன் அது ஏன்...

சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது

சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது
தூரல் ஏன் அது ஏன்
என் கனவை கலைக்கிறது
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறிப்போவதேனடி
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல
பிரிவின் வலியோ கொடிது உயிரே

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்

Saturday, September 26, 2009

என் காதலே என் காதலே

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மழையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா

அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
(என் காதலே)

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுவேன்
கண்களை நீ மூடி கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுவேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனிமூட்டமா
உயிர் தொழியா இல்லை எதிரியா, என்று தினமும் போராட்டமா

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

கண்ணதாசன் காரைக்குடி

கண்ணதாசன் காரைக்குடி
பெயரை சொல்லி ஊத்தி குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன் டா
கண்ணாடி கோப்பையில் கண்ண மூடி நீச்சல் அடி
ஊறுகாய்யா தொட்டுக்கிட்டா ஒடி போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசியலிசம் தான்

பொண்டாட்டி பிள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லையினா சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்கு பாரு புலம்புறார்
நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே
நூறு தாண்டுனா நடக்க பாதை இல்லையே

அண்ணனும் தம்பியும் எல்லாரும்
இங்க வந்தா டப்பாங்குத்து தானே
ஒவரா ஆச்சுதுனா வெட்டுக்குத்து தானே
எங்களுக்கு தண்ணியில் கண்டம் இல்லை
எங்களுக்குள் சாதி மதம் இரண்டும் இல்லை
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சு
ரோடுக்கு கடையில் மனுசன் ஜாலிய பாரு
சேட்டு கடையில் மனைவி தாலிய பாரு

படம் : அஞ்சாதே (2007)
இசை : சுந்தர் சி. பாபு
பாடியவர் : மிஷ்கின்

பேசுகிறேன் பேசுகிறேன்

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....
(பேசுகிறேன்..)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..
(பேசுகிறேன்..)

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: நேகா பேசின்

ஓ வெண்ணிலா இரு வானிலா

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா..)

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசிய வாசுதேவன். மனோ, SN சுரேந்தர்

உயிரின் உயிரே

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அனைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, சுசித்ரா

வாழ்க்கையை யோசிங்கடா

வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா Go

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஞாபகம் வந்ததடா
அந்த நான் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃபுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சிக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

உழைக்கும் கையை நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி
குரல் கொடுத்த ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன்
நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையுங்கடா
என் மேலே நம்பிக்கை வையுங்கடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

காதல் வந்துச்சுன்னா
முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோணுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும்
லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

தாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுப்போல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனை நமக்கு
இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சிக்கடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
(வாழ்க்கையை..)

படம்: சென்னை 600028
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித், திப்பு, ஹரிசரண், கார்த்திக்

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வச

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்

ஒலியும் ஒளியும் கர்ரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி
(ஊர்வசி..)
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்..

கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியாய் சிலையேது
ஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசி
பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
பாலிலே கலர்கள் போராமல் இருட்டிலே கண்ணடிச்சென்ன பயன்?
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்?
ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷாஹுல் ஹமீட், சுரேஷ் பீட்டர்

தமிழா தமிழா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

படம் : ரோஜா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன்

ஓ மனமே ஓ மனமே

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகள் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எறிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே..)

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
(விடிகின்ற..)

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டு தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதருதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா
(விடிகின்ற..)

படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மதுமிதா

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை


நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)

கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்
புன்னகை என்னும் பொன்னகையைத்தான்
முகமெங்கும் மீட்டு வைப்பேன்
உங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொத்திப் பொத்தி வைத்து
பழக்கமுமில்லை வழக்கமுமில்லை
மனமொரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம் தான்
வெல்லும் தினம்தான்


என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே


ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே அன்பே ஆருயிரே


படம்: அன்பே ஆருயிரே
இசை/பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி

காலையில் தினமும்

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா
அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே
உன் அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறிது
(காலையில்..)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
(காலையில்...)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் ஐயா
தாலேலோ பாடுவேன் தாயாகி வைத்ததே
நீயாட நீயாட தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச என்னுதோ

அதிகாலை சேவல் கூவும் அது வரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி டாலோ பொன்மனி தாலேலோ
பொன்மனி தாலேலோ பொன்மனி தாலேலோ

படம்: நியூ
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கில்லாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே..)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா ப்ரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
(அன்பே..)

கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மனம் ச்ல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே
அவள் கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே மணியே
அவள் மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிராய் உரையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து
மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
(அன்பே..)

படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்

சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டால் காதல் வந்தால் ஓஓ
கண்ணீர் மட்டும் துணையாகுமே
(ஒரு கல்..)

திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்
காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே
(ஒரு கல்..)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும்
(ஒரு கல்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: அட்னான் சாமி

பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்

குசேலன் - சினிமா சினிமா சினிமா சினிமா

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா
வருமா...

கடவுள் யாரென்று யார் கேட்பா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்
அதுக்கு யார் இங்க சாட்சின்னா
அட வேற யாரு நம்ம தலைவருதான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்தி காட்டுது இந்த சினிமாதான்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

பாரு பாரு படம் ஷூட்டிங் பாரு பலர் வேர்வை சிந்துறாங்க
நூறு கைகள் ஒன்று சேர்ந்து ஒரு சினிமா உருவாக
காப்பி டீயும் தரும் புரோடக்‌ஷன் பாயும் ரொம்ப முக்கியம்தான்
ஷோலிடல்ல பவர் ரைக்டு போட வேணும் உழைக்கும் வர்க்கம்தான்
மேலும் கீழும் என்ன பேதம் பார்க்க இங்கு ஏற்றம் தாழ்வு இல்லை
கோடம்பாக்கம் இங்கு கோவில் ஆச்சு இந்த சினிமா தொழிலாலே
ஏ க்ரூப் டான்ஸு இந்த கோரஸ் பார்ட்டி எல்லா குடும்பம் ஆகும் தப்பா
வந்த பேரும் இங்க வாழ வைக்கும் இந்த சினிமா சினிமாதான் ஹேய்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா
வருமா...

சூப்பர் ஸ்டார்! அதோ பார்..
ராஜயோகம் பண்ண சூப்பர்ஸ்டார் நம்ம ஊருக்கு வந்தாரு
சிங்கம்னா சிங்கம்தான்
மூக்கு மேலே விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமைதானே அவருக்கு வலிமை
தலை கனத்திடாத தலைவன் எங்கள் அண்ணன் மட்டும்தான்
ஜப்பான் போனால் சூப்பர் ஸ்டாரு டென்மார்க் போனால் சூப்பர் ஸ்டாரு
அமேரிக்காவில் சூப்பர் ஸ்டாரு ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
பார்த்த இவனின் பனியன் நீ கவனி பள்ளி பிள்ளை படிப்பில்ல கவனி
சைகரி இருக்கும் பைகளும் பூக்கும் குடையில் கூட சூப்பர் ஸ்டார்
கடவுள் யாரென்று யார் பார்த்தா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்

சூப்பர் ஸ்டார் பேரைப்பார்
திரை மீது மக்கள் பார்க்கும் போது விசில் வானை பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம்தான்
பாலும் தேனும் சேர்ந்து பந்தில் நீடு ஒன்று வாழ்த்த பாடாதோ
அந்த படையப்பாவின் படைதான் இந்த பூமி எங்கும் அணிவகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை அள்ளும் எங்கள் ஒரே மன்னந்தான்
சூப்பர் ஸ்டாரும் சூரியனும்தான்
உலகம் சுற்றி ஒளியும் ஒன்று
இந்த பெருமை யார்க்கும் இல்லை
இங்க எந்த மனிதனுக்கே ஒன்று தமிழா

கடவுள் யாரென்று யார் கேட்பா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்
அதுக்கு யார் இங்க சாட்சின்னா
அட வேற யாரு நம்ம தலைவருதான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்தி காட்டுது இந்த சினிமாதான்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

படம்: குசேலன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

பார்க்காத என்னை பார்க்காத

பார்க்காத என்னை பார்க்காத
குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத
என்னை விட்டு விட்டு தள்ளிப்போகாத
கொடுத்தத திருப்பி நீ கேக்க
காதல் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பார்த்துக் கொள்ள
நடப்பது கூத்துமில்ல
(பார்க்காத,,)

வேணா வேணான்னு நான் இருந்தேன்
நீதாலே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப்புட்ட
கருப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப்புட்ட
என்னுடன் நடந்த என் நிழல் தனியா நடக்கவிட்ட
உள்ள இருந்த என் உசுர வெளியே மிதக்க விட்ட
(பார்க்காத..)

வேணா வேணான்னு நினைக்கலையே
நானுமுன்னை நொறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்தை
நெஞ்சோடு சேத்து வெச்சேன்
தனியா இருந்த வலியை மட்டும்
தனியா அனுபவிச்சேன்
(பார்க்காத..)

பறவையின் சிறகுகள் விரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
கொடுத்தத திருப்பி நீ கேக்க
கடனா கொடுக்கலையே
உனக்கது புரியலையே

படம்: ஆறு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, சுமங்கலி

கந்தசாமி - ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு

போடி போடி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு

போடி போடி

ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே
உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு
ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி
என்ன சுத்தமா போனா நான் சேஃப்

மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ மேயின் ரோடே..

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி
போடி போடி

ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி
என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..

உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி
கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி

நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விட மாட்றியே
நீ படிச்சப் பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஏ ஏ தள்ளிப்போ
என்னை தள்ளிட்டு போ
கொஞ்சம் கூடு
ரொம்ப மூடு
ஐயோ

வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா
ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி
கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா
ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ கிராஃமாறி
ப்ளீஸ் வாயேன் டேக்மாறி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

படம்: கந்தசாமி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: விக்ரம், சுசித்ரா

தோரணை - வா செல்லம் வா வா செல்லம்

வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம் பூச்சி நீதானே
ஆறடி ஆள் தான் செல்லம்
உதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்னே உன்னே பார்க்கணும் பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவுதான் காணணும்
பொசுக்குன்னு புருஷன்ன்னு சொன்னது
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

என் மனச என் மன ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட ஏன் ஆட்டுற
ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான் நம்பாதடி
(வா செல்லம்..)

வானவில்லில் துப்பட்டா வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா
உன் அழகை கல்வெட்டா நான் செதுக்க சொல்லட்டா
பாதையெல்லாம் பூவை நிக்கட்டா

ஊரில் உள்ள மரங்கள் ஒன்னுமே விடாம
உன் பேரை தான் செதுக்கி வைச்சேன்
வச்சேன் நெஞ்சில் வைச்சேன்

என் கனவில் என் கனவில் உன் சித்திரம்
என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்
நூல் விடுறான் நூல் விடுறான் சிக்காதடி
ரீல் விடுறான் என் எதிரில் மாத்தாதடி

இங்கிலாந்து ராணிக்கா இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொல்வேனே
நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே என் பாதி
ராணி மகா ராணி நீ தானே

முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அன்னேரம்
எனக்கு மட்டும் அழகே உன்ன சேர்த்து ரெட்டை புள்ள

ஃபுல் கலரில் ஃபுல் கலரில் படம் காட்டுறான்
ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்
(வா செல்லம்..)

படம்: தோரணை
இசை: மணிஷர்மா
பாடியவர்: உதித் நாராயணன்

சிந்து பைரவி - தண்ணி தொட்டி தேடி வந்த

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி

படம் : சிந்து பைரவி
பாடியவர் : KJ ஜேசுதாஸ்
இசை : இளையராஜா

ஜோதா அக்பர் - முழுமதி அவளது முகமாகும்

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

சர்வம் - அடடா வா அசத்தலாம்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

எதுவந்தா எனக்கு என்ன
ஒதுங்காத நானும் சொன்னா

I wanna get so hot and naughty with you ohh... hO

கொண்டாடா வாழ்க்க கொண்டாடா
வாழ்கைக்கு வகுப்பு உண்டாடா

I wanna get so hot and naughty with you ohh hO

hO heyy heyy heyyy

சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்

come close to baby Let me drive you crazy

ஆடித்தான் தீர்ப்போம்

Oh come touch me baby
Boy I feel so sexy

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

படம்: சர்வம்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி

குளிர் 100 டிகிரி - மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்

Hey yo! this song is dedicated to everyone,
who miss their friend.. this is how, it feels

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னையும் நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில்
இரு வரியில் முடிந்தாயே

கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

Homie..
Its been a while since we last met
cant forget what happened until my last breath
I regret my action coz what we had was evarlasting
hey no joke man my heart comes crashing

எதுக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகள் அலைமோதி விழுகின்றதே
ஒலியாக இருந்தாய் கடைசியில் சிரித்தாய்
நன்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

Its all coming back...

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆனதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே..
என் பள்ளியே முற்றுப்புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உனை நினைத்தே தோழா

கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கண்மூடினால் (I close my eyes) இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் நீ தானே வருகிறாய்

I am walking down memory lane it's all coming back
dont ever forget me man, that's all i ask
you got the control of my thoughts and emotion
when the world stops yo you put it back into motion

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
நண்பனாக நீயும் வந்தாய் சொல்லாமலே நீயும் சென்றாய்
நீ எங்கு போனாலும் உன் நினைவால் அழுகிறேன்
என் நண்பனே உனை இழக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே உனை இழக்கிறேன் என் நண்பனே

I didn't know the word friend had en end!

படம் : குளிர் 100 டிகிரி
இசை : சசி
பாடியவர் : சிம்பு

ஏஞ்சல் வந்தாளே

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
(ஏஞ்சல்..)

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாக இருந்தேனே
உன் மேனி அழகை ஆராய விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
எல்லாம் சக்ஸஸ் தான் ஆஹா
இனிமேல் கிஸ் கிஸ் தா வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்துவிட வா
உந்தன் உயிரில் உறைந்து விட வா உறவே உறவே
(நீருக்குள்..)
(ஏஞ்சல்..)

படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், சித்ரா

சத்தம் போடாதே : அழகுக் குட்டிச் செல்லம்

அழகுக் குட்டிச் செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பிப் போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியல‌
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள்
தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை

நீ தின்ற மண்சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே

திரைப்படம் : சத்தம் போடாதே
பாடல் : நா. முத்து குமார்
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
இசை : யுவன் சங்கர் ராஜா

லேசா லேசா.....

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ
(லேசா..)

நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
(லேசா..)

வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
நான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
(வெவ்வேறு..)
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒரு வரியில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
(லேசா..)

படம்: லேசா லேசா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

மோதி விளையாடு - மோதி விளையாடு

மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தாததினி தாததினி தானி
உலகம் முழுதும் இருண்டு கெடக்கு
உனது கதவு பூட்டி கெடக்கு
முறையான பலம் கண்டு மோது
போராடு போராடு
பூமி பந்து சுற்றும் வரையில் போராடு

புவி எல்லாம் ஹே காய்த்தாலும்
புலி கூட்டம் அழிவதில்லை வேரோடு

எல டோனி எல டோனி
உன்னை மலிவாக என்னாதடா
திட்டம் போடு வேட்டை ஆடு
புலி பால் ஊட்டி டீ போடு டா

வாழ்வின் அவமானம் வெகுமானம் ஆகும்
ஆனால் தன்மானம் சாவாதடா
உந்தன் மேல் சட்டை களவாடும் கூட்டம்
நாளை நிர்வானம் ஆகுமடா

தோல்வி எல்லாமே எருவாக்கு ஆக்கு
வெற்றி பூந்த்தோட்டம் உருவாக்கு ஆக்கு
அலைகள் விழுந்தாலும் ஓயாதடா

சத்தம் இல்லாமல் மொழி ஏது ஏது
சபதம் இல்லாமல் வாழ்வு ஏதடா
(மோதி..)

நினைப்போம் முடிப்போம் ஜெயிப்போம்
தகிட தகிட தோம்
நெருப்பாய் இருப்போம் நிலைப்போம்
தகிட தகிட தோம்
மதித்தால் மதிப்போம்
மிதித்தால் மிதிப்போம்
தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம்
(எல டோனி..)

1 2 3 4
Who are we for
5 6 7 8
Whom do we appreciate
India
( 1 2..)

ஒன்னு ரெண்டு மூனு நாலு
என்ன சொன்ன என்ன சொன்ன
அஞ்சு ஆறு ஏழு எட்டு
சுறுக்கா சொல்லு அழுத்தி சொல்லு
இந்தியா

புலியின் வேகம் சிங்க வீரம்
நரியின் திறமை கொக்கின் பொறுமை
இவை தானே வெற்றிக்கு தேவை

இரவை உருக்கி விடியல் எடுக்க
உறவை உருக்கி பகையை முடிக்க
இது தானே சரியான வேலை

இருள் பாதி ஒளி பாதி
இன்பம் துன்பம் வெற்றி தோல்வி சரி பாதி
இருளை நீ எறித்தால் தான்
மனிதன் என்ற பேருக்கு நல்ல மரியாதை
(எல டோனி...)

கீழே வீழ்ந்தாலும் நீர் வீழ்ச்சி ஆகு
அதுலே மின்சாரம் உண்டாகட்டும்
மேலே போனாலும் மேகம் போல் ஆகு
ஹே அதுலே மின்னல்கள் விளையாடட்டும்

அணியால் அடைகின்ற அடையாளம் உறிமை
நீயே அடையாளம் ஆனால்தான் பெருமை
புயலை கடன் வாங்கி போராட வா
(மோதி..)

படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவா

ஓ மாரியா ஓ மாரியா

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
ஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
ஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியா
கடலுக்கு ஃபிஷிங் நெட்டு காதலுக்கு இண்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
(ஓ மாரியா..)

மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதி என்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு எனக்கு ஆசை விரைந்தோடி வா
கம்பியூட்டரில் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி
(ஓ மாரியா..)

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது இண்டர்நெட்டு
மனசை விட்டு மௌசை தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம்
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்
(ஓ மாரியா..)

மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ

படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேவன், யுகேந்திரன், ஃபெபி

ஆதவன் - ஹசிலி ஃபிசிலி என் ரசமணி

அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுவா இங்கு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியா பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மேதை நீயா
(ஹசிலி..)

படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, மாயா, Dr. பெர்ன்
வரிகள்: பா. விஜய்

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு
(தென்கிழக்கு..)

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வரலையே
உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே
(தென்கிழக்கு..)

செங்காத்து மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே
(தென்கிழக்கு..)

படம்: கிழக்கு சீமையிலே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா

நினைத்தாலே இனிக்கும் - பனாரஸ் பட்டு கட்டி....

பனாரஸ் பட்டு கட்டி
மல்லிப்பூ கொண்டை வச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனசை கெடுத்தா
அவ முந்தான பூவ கண்டு
என் உயிரு புட்டுக்குச்சு
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னுடைய பேச்சினிலே ரிங்டோன்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன் விழியின் ஓசையிலே டாஸ்மார்க்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
மயிலே உன் மாராப்பில் மல்கோவா டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ ப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ ஃப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

பளபளக்குது உன் மேனி கண்ணாடி டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
ராத்திரி நீ கண் முளிச்சா நட்சத்திரம் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
பக்கத்திலே நீ வந்தா பல்ஸ் ரேட்டு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னை பார்த்த நாள் முதலா ஃபுல் மீல்ஸு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா
(பனாரஸ்..)

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: விஜய் அந்தோணி

உப்புக் கல்லு தண்ணீருக்கு ...

உப்புக் கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
கணணி ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தச் சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பிச் செல்லக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதித் தாள போல வீணே நாளும் தேயிற - நான்
தேர்வுத் தாள கண்ணீரால ஏனோ எழுதுற
இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....
நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் - உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் - உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்

(உப்புக் கல்லு......)

மீசை வைத்த அன்னை போலே உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்
பார்வைப் பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும் - உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் - கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே

(உப்புக் கல்லு......)

படம் : கருப்புசாமி குத்தகைக்தாரர் (2007)
இசை : தினா
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

படம்: அண்ணாமலை
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

கண் முன்னே எத்தனை நிலவு

கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே
ஏன் உடம்பினில் உடம்பினில் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எதையோ வேண்டும் காதலிலே

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம்தானே
ஒரு முறைதான் உரசி போடி பார்வையிலே

அடி 15 போனது 16 வந்தது
தாவனி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே...

இரக்கம் இல்லையோ?
உன் இதழ் கண்டால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்
(
அடி 15..)

ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே
வேளைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்

அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்க பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
ஓஹோஹோ..
(
வயதுக்கு..)

பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
கண்ணேதிரே பெண் இருந்தால்
நான் கண்மூடி வாழ்வேன்

உன் தகப்பன் திமிரையும் ஏற்றுக்கொள்வேன்
உன் தாயின் திட்டையும் ஏற்றுக்கொள்வேன்
உன் அண்ணன் அடியும் வாங்கிகொள்வேன்
நீ எனது அருகில் நின்றாலே
ஹேஹேஹோ..
(
வயதுக்கு..)
(
இரக்கம்..)
(
அடி 15..)

அடி 15.. 16..
தாவனி.. மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே..

படம்: துள்ளுவதோ இளமை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, திம்மி