Saturday, September 26, 2009

உயிரின் உயிரே

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அனைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, சுசித்ரா

No comments:

Post a Comment