Saturday, September 26, 2009

உப்புக் கல்லு தண்ணீருக்கு ...

உப்புக் கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
கணணி ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தச் சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பிச் செல்லக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதித் தாள போல வீணே நாளும் தேயிற - நான்
தேர்வுத் தாள கண்ணீரால ஏனோ எழுதுற
இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....
நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் - உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் - உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்

(உப்புக் கல்லு......)

மீசை வைத்த அன்னை போலே உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்
பார்வைப் பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும் - உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் - கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே

(உப்புக் கல்லு......)

படம் : கருப்புசாமி குத்தகைக்தாரர் (2007)
இசை : தினா
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ

No comments:

Post a Comment