Tuesday, September 29, 2009

மனசே மனசே மனசில் பாரம்...

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
(மனசே..)

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம்இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே
(மனசே..)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பறிமாரினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
(மனசே..)

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே..
(மனசே..)


படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

No comments:

Post a Comment