Saturday, September 26, 2009

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு
(தென்கிழக்கு..)

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வரலையே
உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே
(தென்கிழக்கு..)

செங்காத்து மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே
(தென்கிழக்கு..)

படம்: கிழக்கு சீமையிலே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா

No comments:

Post a Comment