Saturday, October 24, 2009

மலரே மௌனமா?

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
(மலரே)

படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சு பேசும் தட்டை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவில் மாலை ஒன்றாய் கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன் மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக
(மஞ்சள் பூசும்..)

கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
(மஞ்சள் பூசும்..)

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் உடைந்தது
ஓ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் இண்வழி
சொல்லும் சொல்லின் நழ்வழி
(மஞ்சள் பூசும்..)

படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தேவன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி

ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
(ஆயிரம்..)

வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு
சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் குழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க
திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்
(ஆயிரம்..)

சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
(ஆயிரம்..)

கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

படம்: வேல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
மண்..
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீ நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
அன்பால்
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையில் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே என்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே ஒச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கரு கரு..)
(தாமரை..)
(தாமரை..)
ஒரு மல்லிச்சரமே...

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்

தொடு தொடு எனவே

தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கேலி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
(ஆப்பிள்..)

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விசுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னௌ காணாமல் அன்னம் தண்ணீர் த்டமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
(எங்கோ..)
(ஆப்பிள்..)

பெண்ணே உன்னை மறூமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்றூ சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்..
(எங்கோ..)
(ஆப்பிள்..)
(பூவின்..)

படம்: ரோஜா கூட்டம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவள் சேலை கட்ட பார்த்தா போதும்
ஒரு அம்மாண்டி ராணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட...
(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...
(ஆயர்பாடியில்..)
பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட...

படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்: மிதாளி

அடடா அடடா அடடா

அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்
(அடடா..)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சித்தார்த்

மதுரை வீரன் தானே

மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன் தானே

ஏ….சிங்கம் போலே!
ஏ…சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு

ஏ புலியைப் போல
ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ இந்தா ஏ இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!

ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
அ அ அ அ..
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ கோவில் பட்டி முறுக்கு
சும்மா குனிய வச்சி முறுக்குடா டேய்..

ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..

படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: பரவை முனியம்மா

தல போல வருமா

தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நீல வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா?

விண்ணை வீழ்த்த ஒரு வில்லில்லை
இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?


படம்: அட்டகாசம்
பாடல்: வைரமுத்து
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ், டோனன், அர்ஜூன்

நிலவு தூங்கும் நேரம்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)

படம்: குங்குமச் சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளத்தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளத்தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
பாற மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப பாற மீனு நடத்திவர பாட்டியும்
அங்கு தேர்போல போகுதையா ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்..

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வச்சதையா வெயிட்டிங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வச்சதையா வெயிட்டிங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
அவர் சொன்னப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகாரு இறாங்கோ
அந்த நெத்திலி பொடியை காரப்பொடியை கலகலனு இருக்குது
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகாரு இறாங்கோ
அந்த நெத்திலி பொடியை காரப்பொடியை கலகலனு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
அந்த சக்கர மீனா வவ்வால் மீனா வழ வழப்ப தருகுது
வழ வழப்ப தருகுது

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளை வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்கு மீனு நிஞ்சுரு தானுங்கோ
மாப்பிள்ளை வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்கு மீனு நிஞ்சுரு தானுங்கோ
இந்த திருமனத்தை நடத்திவைக்கும் திர்கவாலு அண்ணங்கோ
இந்த திருமனத்தை நடத்திவைக்கும் திர்கவாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு திமிங்கிலம்தானுங்கோ

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

வாழ மீனுக்கும்.. ஓ ஓ ஓ..
அந்த சென்னாக்குனி ஓ ஓ ஓ...
அந்த அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: கானா உலகநாதன்

நிலா காய்கிறது

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து

ஆசை நூறு வகை

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

..........ஆசை நூறு வகை.........

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே

..........ஆசை நூறு வகை.........

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

..........ஆசை நூறு வகை.........

படம் : அடுத்த வாரிசு (1983)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசிய வாசுதேவன்

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(இது எப்படி..)
(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
(பூவுக்கெல்லாம்..)

படம்: உயிரோடு உயிராக
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி
வரிகள்: வைரமுத்து

என்னை தாலாட்ட வருவாளோ...

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

[என்னை தாலாட்ட...]

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா?
நான் தூங்க மடி ஒன்று தாராதா?
தாகங்கள் தாபங்கள் தீராதா?
தாளங்கள் ராகங்கள் சேராதா?
வழியோரம் விழி வைக்கிறேன்...

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்...
[என்னை தாலாட்ட...]
படம் : காதலுக்கு மரியாதை
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : பழனி பாரதி

காதல் வந்தால் சொல்லி அனுப்பு...

Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..
(காதல்..)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
(காதல்..)
என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
(காதல்..)
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு

என் ரகசிய கனவுகள்

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போலே வருவானா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா தொடுவானா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்

பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா செய்பவனா செய்பவனா

பெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா

ஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்

ஆண் : கன்னக்குழிகள் தான் காதல் தேசமா ஈரமுத்தம் தான் இன்ப தீர்த்தமா
இவள் தானா இவள் தானா இவளோடு இணைவேனா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா

ஆண் : என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா
மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா

பெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

பெண் : இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

படம்: அலை
பாடியவர்கள்: கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்த்தினி
இசை: வித்யாசாகர்

மன்றம் வந்த தென்றலுக்கு

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

(மன்றம் வந்த)

தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம் வந்த)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

படம்:மௌன ராகம்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
(ஒவ்வொரு..)

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

(மனமே..)
(ஒவ்வொரு..)

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..

(மனமே..)
(ஒவ்வொரு..)
(மனமே..)

படம்: ஆட்டோகிராஃப்
பாடியவர்: சித்ரா
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா. விஜய்

அஞ்சலி அஞ்சலி!

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)

(அஞ்சலி)

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை

(அஞ்சலி)

பூப்போல கண்ணாலேதான் பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடுதான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல்தான்
வண்ணப் பாப்பா அஞ்சலிதான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல்தான்
ஆடிப் பாக்கும் அஞ்சலிதான்
நடந்து நடந்து வரும் பூச்செண்டு
பறந்து பறந்து வரும் பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கைகொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)


படம் : அஞ்சலி

இசை : இளையராஜா

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)


படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

வானும் மண்ணும் - காதல் மன்னன்

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே....

பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை

பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!


படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியது:- லதா ரஜினிகாந்த்
இசை:- இளையராஜா

கண்டேன் காதலை - வெண்பஞ்சு மேகம் என்பேனா

வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொவது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே மண் மேலே
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ
(வெண்பஞ்சு..)

கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்
(கண்டேன்..)

குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
எல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன
என்னையே..
(கண்டேன்..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், கார்த்திக்

கண்டேன் காதலை - ஒரு நாள் இரவில்

ஒரு நாள் இரவில் பகல் போல் இரவில்
பருவம் பதினாறை கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் மெழுகாகி நின்றேனே
கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற மானை
பார்த்தாளேப் பயத்தோடும் சேனை
வெட்கத்தில் அடங்காத பெண்ணை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை
(ஒரு நாள்..)

படப்படப்படபடப்பில் பார்த்தாளே பயமேற
தொடத்தொடத்தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாயே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாயே
(படபட..)

சின்னச்சின்னக் கண்ணாளே
சிக்க வச்சிப் போறாளே
சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் துளைத்தேனே
(ஒரு நாள்..)

வறேன் வறேன் வறேன் என்றாலும் மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே
ஐயய்யோ ஐயய்யோ யாரோ நீ
என்னாளும் எனை ஆள வந்தாய் நீ
பஞ்சிருக்கும் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் தொலைத்தேனே
(ஒரு நாள்..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு

கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)

கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்

கண்டேன் காதலை - ஓடோ ஓடோ ஓடோடி போறேன்

ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்

ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
கனவெல்லாம் விரலோடு
உலகெல்லாம் அழகோடு
இனி எல்லாம் அவனோடு
பூவாகும் தார் ரோடு
காற்றாகும் தார் ரோடு
மாற்றங்கள் வேரோடு
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ..)

ஹே என் பாத சிறகே
நீ என் முளைத்தாய் கேட்காமல் என்னை
ஹே என் மன சிறையே
நீ என் திறந்தாய் கேட்காமல் என்னை
ஒற்றை பின்னல் அவனுக்காக
நெற்றி போட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
இதழின் ஈரம் அவனுக்காக
மனதின் பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)

ஹே நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்
கேட்காதே என்னை
ஹே நீ கொதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்
கேட்காதே என்னை
தானே பேசி நடக்கும் போதும்
(அவனுக்காக)
காற்றை முத்தம் கொடுக்கும் போதும்
(அவனுக்காக)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
கன்னம் சிவந்து நிற்கும் போதும்
(yeah yeah)
பற்றி கொண்டு கத்தும் போதும்
(oh yeah)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: லாவன்யா, ரேஷ்மி விஜயன்
வரிகள்: யுகபாரதி

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
(தகிட..)

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆ...
(தகிட..)

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
(தகிட..)

படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆமபளையே தெரியாமன கொழந்தை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூபி எப்படி உய்யும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி

கண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடு இது
கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
அட சேல பாவாட அது மலை ஏறிப்போச்சு
மிடியோடு சுடிதாறும் பொது உடையாகிப்போச்சு
போலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அது ரோட்டில் வந்தாலும் வழுக்கும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி

அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே

திரையில பொய்களை சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துல்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்லை
தாயே செத்தாலும் அழுவதில்லை
அட ஏழுக்குண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
(காலம்..)

படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

சொந்த குரலில் பாட

சொந்த குரலில் பாட
ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ சுசிலா ஆண்டி
ஹெல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்
(சொந்த..)

காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூரு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
(சொந்த..)

இந்த பூமி பழைய பூமி அல்லவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
(சொந்த..)

படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஷாலினி

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பயா
நம் மேல் நம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
(சுடிதார்..)

உன் பேரை சொன்னாலே
நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும்தான்
நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா
(உன் மேல்..)

பல கோடி பெண்களிலே
எதர்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதலிது
நெஞ்சை விட்டு போகுமா
(உன் மேல்..)
(சுடிதார்..)

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: வித்யாசாகர்

இதயம் ஒரு கோவில்

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(இதயம்..)

ஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
(இதயம்..)

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதங்கள்
ராம நாமன் மீதிலே நாடத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம்..)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேறும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேரம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதுயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
(இதயம்..)

படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், இளையராஜா