Saturday, October 24, 2009

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பயா
நம் மேல் நம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
(சுடிதார்..)

உன் பேரை சொன்னாலே
நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும்தான்
நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா
(உன் மேல்..)

பல கோடி பெண்களிலே
எதர்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதலிது
நெஞ்சை விட்டு போகுமா
(உன் மேல்..)
(சுடிதார்..)

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: வித்யாசாகர்

No comments:

Post a Comment