Saturday, October 24, 2009

மலரே மௌனமா?

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
(மலரே)

படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சு பேசும் தட்டை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவில் மாலை ஒன்றாய் கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன் மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக
(மஞ்சள் பூசும்..)

கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
(மஞ்சள் பூசும்..)

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் உடைந்தது
ஓ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் இண்வழி
சொல்லும் சொல்லின் நழ்வழி
(மஞ்சள் பூசும்..)

படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தேவன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி

ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
(ஆயிரம்..)

வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு
சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் குழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க
திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்
(ஆயிரம்..)

சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
(ஆயிரம்..)

கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

படம்: வேல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
மண்..
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீ நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
அன்பால்
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையில் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே என்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே ஒச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கரு கரு..)
(தாமரை..)
(தாமரை..)
ஒரு மல்லிச்சரமே...

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்

தொடு தொடு எனவே

தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கேலி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
(ஆப்பிள்..)

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விசுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னௌ காணாமல் அன்னம் தண்ணீர் த்டமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
(எங்கோ..)
(ஆப்பிள்..)

பெண்ணே உன்னை மறூமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்றூ சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்..
(எங்கோ..)
(ஆப்பிள்..)
(பூவின்..)

படம்: ரோஜா கூட்டம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவள் சேலை கட்ட பார்த்தா போதும்
ஒரு அம்மாண்டி ராணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட...
(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...
(ஆயர்பாடியில்..)
பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட...

படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்: மிதாளி

அடடா அடடா அடடா

அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்
(அடடா..)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சித்தார்த்

மதுரை வீரன் தானே

மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன் தானே

ஏ….சிங்கம் போலே!
ஏ…சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு

ஏ புலியைப் போல
ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ இந்தா ஏ இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!

ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
அ அ அ அ..
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ கோவில் பட்டி முறுக்கு
சும்மா குனிய வச்சி முறுக்குடா டேய்..

ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..

படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: பரவை முனியம்மா

தல போல வருமா

தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நீல வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா?

விண்ணை வீழ்த்த ஒரு வில்லில்லை
இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?


படம்: அட்டகாசம்
பாடல்: வைரமுத்து
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ், டோனன், அர்ஜூன்

நிலவு தூங்கும் நேரம்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)

படம்: குங்குமச் சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளத்தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளத்தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
பாற மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப பாற மீனு நடத்திவர பாட்டியும்
அங்கு தேர்போல போகுதையா ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்..

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வச்சதையா வெயிட்டிங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வச்சதையா வெயிட்டிங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
அவர் சொன்னப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகாரு இறாங்கோ
அந்த நெத்திலி பொடியை காரப்பொடியை கலகலனு இருக்குது
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகாரு இறாங்கோ
அந்த நெத்திலி பொடியை காரப்பொடியை கலகலனு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
அந்த சக்கர மீனா வவ்வால் மீனா வழ வழப்ப தருகுது
வழ வழப்ப தருகுது

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளை வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்கு மீனு நிஞ்சுரு தானுங்கோ
மாப்பிள்ளை வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்கு மீனு நிஞ்சுரு தானுங்கோ
இந்த திருமனத்தை நடத்திவைக்கும் திர்கவாலு அண்ணங்கோ
இந்த திருமனத்தை நடத்திவைக்கும் திர்கவாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு திமிங்கிலம்தானுங்கோ

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

வாழ மீனுக்கும்.. ஓ ஓ ஓ..
அந்த சென்னாக்குனி ஓ ஓ ஓ...
அந்த அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: கானா உலகநாதன்

நிலா காய்கிறது

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து

ஆசை நூறு வகை

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

..........ஆசை நூறு வகை.........

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே

..........ஆசை நூறு வகை.........

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

..........ஆசை நூறு வகை.........

படம் : அடுத்த வாரிசு (1983)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசிய வாசுதேவன்

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(இது எப்படி..)
(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
(பூவுக்கெல்லாம்..)

படம்: உயிரோடு உயிராக
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி
வரிகள்: வைரமுத்து

என்னை தாலாட்ட வருவாளோ...

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

[என்னை தாலாட்ட...]

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா?
நான் தூங்க மடி ஒன்று தாராதா?
தாகங்கள் தாபங்கள் தீராதா?
தாளங்கள் ராகங்கள் சேராதா?
வழியோரம் விழி வைக்கிறேன்...

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்...
[என்னை தாலாட்ட...]
படம் : காதலுக்கு மரியாதை
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : பழனி பாரதி

காதல் வந்தால் சொல்லி அனுப்பு...

Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..
(காதல்..)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
(காதல்..)
என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
(காதல்..)
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு

என் ரகசிய கனவுகள்

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போலே வருவானா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா தொடுவானா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்

பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா செய்பவனா செய்பவனா

பெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா

ஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்

ஆண் : கன்னக்குழிகள் தான் காதல் தேசமா ஈரமுத்தம் தான் இன்ப தீர்த்தமா
இவள் தானா இவள் தானா இவளோடு இணைவேனா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா

ஆண் : என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா
மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா

பெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

பெண் : இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

படம்: அலை
பாடியவர்கள்: கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்த்தினி
இசை: வித்யாசாகர்

மன்றம் வந்த தென்றலுக்கு

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

(மன்றம் வந்த)

தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம் வந்த)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

படம்:மௌன ராகம்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
(ஒவ்வொரு..)

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

(மனமே..)
(ஒவ்வொரு..)

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..

(மனமே..)
(ஒவ்வொரு..)
(மனமே..)

படம்: ஆட்டோகிராஃப்
பாடியவர்: சித்ரா
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா. விஜய்

அஞ்சலி அஞ்சலி!

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)

(அஞ்சலி)

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை

(அஞ்சலி)

பூப்போல கண்ணாலேதான் பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடுதான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல்தான்
வண்ணப் பாப்பா அஞ்சலிதான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல்தான்
ஆடிப் பாக்கும் அஞ்சலிதான்
நடந்து நடந்து வரும் பூச்செண்டு
பறந்து பறந்து வரும் பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கைகொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)


படம் : அஞ்சலி

இசை : இளையராஜா

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

(பூவே)

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)


படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

வானும் மண்ணும் - காதல் மன்னன்

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே....

பெண் குரல்:- கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை

பெண் குரல்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

பெண் குரல்: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

பெண் குரல்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!


படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியது:- லதா ரஜினிகாந்த்
இசை:- இளையராஜா

கண்டேன் காதலை - வெண்பஞ்சு மேகம் என்பேனா

வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொவது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே மண் மேலே
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ
(வெண்பஞ்சு..)

கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்
(கண்டேன்..)

குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
எல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன
என்னையே..
(கண்டேன்..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், கார்த்திக்

கண்டேன் காதலை - ஒரு நாள் இரவில்

ஒரு நாள் இரவில் பகல் போல் இரவில்
பருவம் பதினாறை கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் மெழுகாகி நின்றேனே
கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற மானை
பார்த்தாளேப் பயத்தோடும் சேனை
வெட்கத்தில் அடங்காத பெண்ணை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை
(ஒரு நாள்..)

படப்படப்படபடப்பில் பார்த்தாளே பயமேற
தொடத்தொடத்தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாயே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாயே
(படபட..)

சின்னச்சின்னக் கண்ணாளே
சிக்க வச்சிப் போறாளே
சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் துளைத்தேனே
(ஒரு நாள்..)

வறேன் வறேன் வறேன் என்றாலும் மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே
ஐயய்யோ ஐயய்யோ யாரோ நீ
என்னாளும் எனை ஆள வந்தாய் நீ
பஞ்சிருக்கும் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் தொலைத்தேனே
(ஒரு நாள்..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு

கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)

கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்

கண்டேன் காதலை - ஓடோ ஓடோ ஓடோடி போறேன்

ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்

ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
கனவெல்லாம் விரலோடு
உலகெல்லாம் அழகோடு
இனி எல்லாம் அவனோடு
பூவாகும் தார் ரோடு
காற்றாகும் தார் ரோடு
மாற்றங்கள் வேரோடு
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ..)

ஹே என் பாத சிறகே
நீ என் முளைத்தாய் கேட்காமல் என்னை
ஹே என் மன சிறையே
நீ என் திறந்தாய் கேட்காமல் என்னை
ஒற்றை பின்னல் அவனுக்காக
நெற்றி போட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
இதழின் ஈரம் அவனுக்காக
மனதின் பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)

ஹே நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்
கேட்காதே என்னை
ஹே நீ கொதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்
கேட்காதே என்னை
தானே பேசி நடக்கும் போதும்
(அவனுக்காக)
காற்றை முத்தம் கொடுக்கும் போதும்
(அவனுக்காக)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
கன்னம் சிவந்து நிற்கும் போதும்
(yeah yeah)
பற்றி கொண்டு கத்தும் போதும்
(oh yeah)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: லாவன்யா, ரேஷ்மி விஜயன்
வரிகள்: யுகபாரதி

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
(தகிட..)

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆ...
(தகிட..)

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
(தகிட..)

படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆமபளையே தெரியாமன கொழந்தை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூபி எப்படி உய்யும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி

கண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடு இது
கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
அட சேல பாவாட அது மலை ஏறிப்போச்சு
மிடியோடு சுடிதாறும் பொது உடையாகிப்போச்சு
போலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அது ரோட்டில் வந்தாலும் வழுக்கும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி

அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே

திரையில பொய்களை சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துல்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்லை
தாயே செத்தாலும் அழுவதில்லை
அட ஏழுக்குண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
(காலம்..)

படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

சொந்த குரலில் பாட

சொந்த குரலில் பாட
ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ சுசிலா ஆண்டி
ஹெல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்
(சொந்த..)

காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூரு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
(சொந்த..)

இந்த பூமி பழைய பூமி அல்லவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
(சொந்த..)

படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஷாலினி

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பயா
நம் மேல் நம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
(சுடிதார்..)

உன் பேரை சொன்னாலே
நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும்தான்
நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா
(உன் மேல்..)

பல கோடி பெண்களிலே
எதர்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதலிது
நெஞ்சை விட்டு போகுமா
(உன் மேல்..)
(சுடிதார்..)

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: வித்யாசாகர்

இதயம் ஒரு கோவில்

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(இதயம்..)

ஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
(இதயம்..)

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதங்கள்
ராம நாமன் மீதிலே நாடத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம்..)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேறும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேரம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதுயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
(இதயம்..)

படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், இளையராஜா

Tuesday, September 29, 2009

வாரணம் ஆயிரம் - அனல் மேலே பனித்துளி

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: தாமரை

ஆகாய வெண்ணிலாவே...

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

(ஆகாய வெண்ணிலாவே)


ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

( ஆகாய வெண்ணிலாவே )


பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

(ஆகாய வெண்ணிலாவே)


படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்

நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்..

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

.......... நிற்பதுவே நடப்பதுவே .........

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

.......... நிற்பதுவே நடப்பதுவே .........

வரிகள் : பாரதியார்
இசை : இளையராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்திரா

ஜூன் போனால் ஜூலை காற்றே...

ஜூன் போனால் ஜூலை காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!

ஆரைக்குள்ளே மழை வருமா?
வெளியே வா குதூகலமா!
இந்த பூமிப் பந்து, எங்கள் கூடைப் பந்து!
அந்த வானம் வந்து, கூரை செய்ததின்று!
கறை இருக்கும் நிலவினை சலவை செய்!
சிறையிருக்கும் மனங்களைப் பறவை செய்!
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

இருப்போமா வெளிப்படையாய்?
சிரிப்போமா மனதுடையாய்?
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே!
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே!
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்,
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்,
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: அருண், க்ரீஷ்

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே.....

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,
தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!
நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.
கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,
மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.
சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,
எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிணி, கார்த்திக், க்ரீஷ்

நினைத்து நினைத்து....

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்பிடி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்பிடி சொல்லுவேன்?
உடைந்து போன வளையலின் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே!

(நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.

(நினைத்து)

படம்:- 7/G ரெயின்போ காலனி
இசை:- யுவன் சங்கர்ராஜா
பாடல்:- நா.முத்துக்குமார்

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

படம் : படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து

காதலில் விழுந்தேன் - தோழியா என் காதலியா

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்

நிலா காய்கிறது.....

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து

Where is the party - சிலம்பாட்டம்

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

Saturday nightன்னா clubbingதானே
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா
என்னதான் லைஃபு இது
எஞ்சாய் பண்ற வயசு இது
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

(இன்னாம்மா..)

Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ எங்க வூட்ல
Where is the party tonight..
நடு ரோட்லம்மா..
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..

இன்னாப்பா இது கொட்ஷலா கிது
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது

தே நீ ஒன்னும் கவலப்படாத
நம்ம ஆடுனா
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
பொண்ணை குத்தம் சொல்லாத
சந்தோஷத்தைக் கொல்லாத

Where is the party
அ ஒங்க வூட்ல பார்ட்டி
Where is the partyt..
அ நம்ம வூட்ல பார்ட்டி
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ நடு ரோட்ல
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
(இன்னாம்மா..)

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி

உசேலே உசேலே....

உசேலே உசேலே...

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
மாட்டு மணிச் சத்தம்
மல்லிகைப்பூவாசம்
கைத்தறி கண்காட்சி
சந்தக் கடைவீதி
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

பூ உண்டு பூ உண்டு ஆளான பெண் உண்டு
பூ சூடும் பெண் இல்ல ஃபாரினுல
பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி
பார்த்துட்டே வாழலாம் நம்மூருல
நம்மோட நெழலும் தான் சாலை மேல் விழுதுன்னா
அபராதம் கேக்குறான் ஃபாரினுலே
தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
கேட்பாரே இல்லயே நம்மூரூல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

நம்மூரு வண்டி வச்சு வண்டி பூரா உட்கார்ந்து
உண்ணும் சுகம் அடடா
வேகாத ரொட்டி வெச்சு வேளைக்கு ரெண்டு
திண்பான் ஃபாரினுல ஐயையோ
ஆண்டிப்பட்டியில் சேவல் சண்டைக்கு
ஃபாக்ஸிங் ஈடில்லையே

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

சைக்கிள் பெல்லின் சங்கீதம்
மொட்டைமாடி காற்றாடி
ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்பம் இன்பம்
கம்புச்சண்டை கரகாட்டம்
கோயில் குளம் கற்பூரம்
பொங்கல் தல தீபாவளி இன்பம் இன்பம்
தண்ணிக் கொடம் சண்டையும்
பானை மோரும் பண்ணீரும்
ஜன்னலில்லா பேருந்தும் இன்பம் இன்பம்

தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
எங்கும் பச்சைப்பசேலே

உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே...
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல

ஆல்பம் : உசேலே
பாடல் : உசேலே உசேலே
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், டிம்மி, கார்த்திக் & திப்பு
பாடல் வரிகள் : பா.விஜய்

காதல் ரோஜாவே......

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில்,
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால்,
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில்,
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

வீசுகின்ற தென்றலே!
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா!
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே!
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே!
புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

முதல் நாள் இன்று.....

ஆண்:
முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று
வேராக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண்:
என், உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்றுக் கொண்டது
நில் என்றால், சட்டென்று, நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
ஓஹோ, ஜானி ஜான்ன்ன்ன்...

ஆண்:
[முதல் நாள்...]

பெண்:
இசை தாகம் தருகின்ற ஒன்றை
உயிர்போலே காதல் மேகம் என்னை
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்

ஆண்:
முழுதாக முழுகவும் இல்லை
முழுகாமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல், எழுந்தவர் கானும் என்னை
ஓஹூ ஹூ வோஹ் வோஹ்.
வெகு தூரம், வந்தேன்
காதல், கிருமிகள் நெருங்காமல்

பெண்:
முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில், காதல் விதை தூவு
இல்லை எனில் நீ தன்னம் தனி தீவு
வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு
ஓஹொஹொஹ்..

ஆண்:
உதட்டாலே, காதல் என்னும் சொல்லை
உரைத்தாலே, கூட வரும் தொல்லை
வாழும் மட்டும், விழிகளில் தூக்கம் கெடும்

பெண்:
ஆஹ் ஹஹ் ஹாஹஹா ஓஹ் வோஹ்..
சுகம் ஏது, வாழ்வில்
காதல், வலியை சுமக்காமல்

ஆண்:
[முதல் நாள்...]

உப்புக்கள் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்
ஓஓ டொரியே ஏய்!
ஓ சன சோனா
ஓ சன சோனா
ஓ சன சோனா
ஓ சன சோனா...

விரும்பிக் கேட்டவர்: உதயா

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: K.K, மஹாலஷ்மி
பாடலாசிரியர்: பா.விஜய்

மனசே மனசே மனசில் பாரம்...

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
(மனசே..)

இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம்இது மட்டும்தானே
நட்பினை எதிர்ப்பார்க்குமே
(மனசே..)

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ட உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பறிமாரினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று பார்க்கத்தான்
வலிமை இருக்கின்றதா?
(மனசே..)

ஆறேழு ஆண்டு போனதும்
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன்
முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என்றேதான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள்
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே..
(மனசே..)


படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல......

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

(ஒண்ணுக்குள்ள ஒண்ணா)

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே!!

திரைப்படம் :வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரசன்னா
இசையமைத்தவர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் :தாமரை

பூங்காற்று புதிதானது...

பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

(பூங்காற்று புதிதானது)


வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழி பேசும்
பூவானில் பொன்மேகமும் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

(பூங்காற்று புதிதானது)

நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி
நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ

(பூங்காற்று புதிதானது)


படம்: மூன்றாம் பிறை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

இளமை இதோ இதோ...

ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)


இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே
ஏன்டி நீ பார்த்தியே
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கன்னம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)


கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்கின்ற ஆளேது
யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)



படம் : சகலகலா வல்லவன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பால்சுப்ரமணியம்

ஈரம் - சாரல் ஏன் அது ஏன்...

சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது

சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது
தூரல் ஏன் அது ஏன்
என் கனவை கலைக்கிறது
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறிப்போவதேனடி
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல
பிரிவின் வலியோ கொடிது உயிரே

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்

Saturday, September 26, 2009

என் காதலே என் காதலே

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மழையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா

அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
(என் காதலே)

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுவேன்
கண்களை நீ மூடி கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுவேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனிமூட்டமா
உயிர் தொழியா இல்லை எதிரியா, என்று தினமும் போராட்டமா

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

கண்ணதாசன் காரைக்குடி

கண்ணதாசன் காரைக்குடி
பெயரை சொல்லி ஊத்தி குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன் டா
கண்ணாடி கோப்பையில் கண்ண மூடி நீச்சல் அடி
ஊறுகாய்யா தொட்டுக்கிட்டா ஒடி போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசியலிசம் தான்

பொண்டாட்டி பிள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லையினா சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்கு பாரு புலம்புறார்
நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே
நூறு தாண்டுனா நடக்க பாதை இல்லையே

அண்ணனும் தம்பியும் எல்லாரும்
இங்க வந்தா டப்பாங்குத்து தானே
ஒவரா ஆச்சுதுனா வெட்டுக்குத்து தானே
எங்களுக்கு தண்ணியில் கண்டம் இல்லை
எங்களுக்குள் சாதி மதம் இரண்டும் இல்லை
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சு
ரோடுக்கு கடையில் மனுசன் ஜாலிய பாரு
சேட்டு கடையில் மனைவி தாலிய பாரு

படம் : அஞ்சாதே (2007)
இசை : சுந்தர் சி. பாபு
பாடியவர் : மிஷ்கின்

பேசுகிறேன் பேசுகிறேன்

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....
(பேசுகிறேன்..)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..
(பேசுகிறேன்..)

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: நேகா பேசின்

ஓ வெண்ணிலா இரு வானிலா

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா..)

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசிய வாசுதேவன். மனோ, SN சுரேந்தர்

உயிரின் உயிரே

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அனைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, சுசித்ரா

வாழ்க்கையை யோசிங்கடா

வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா Go

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஞாபகம் வந்ததடா
அந்த நான் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃபுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சிக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

உழைக்கும் கையை நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி
குரல் கொடுத்த ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன்
நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையுங்கடா
என் மேலே நம்பிக்கை வையுங்கடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

காதல் வந்துச்சுன்னா
முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோணுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும்
லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

தாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுப்போல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனை நமக்கு
இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சிக்கடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
(வாழ்க்கையை..)

படம்: சென்னை 600028
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித், திப்பு, ஹரிசரண், கார்த்திக்

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வச

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்

ஒலியும் ஒளியும் கர்ரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி
(ஊர்வசி..)
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்..

கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியாய் சிலையேது
ஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசி
பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
பாலிலே கலர்கள் போராமல் இருட்டிலே கண்ணடிச்சென்ன பயன்?
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்?
ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷாஹுல் ஹமீட், சுரேஷ் பீட்டர்

தமிழா தமிழா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

படம் : ரோஜா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன்

ஓ மனமே ஓ மனமே

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகள் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எறிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே..)

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
(விடிகின்ற..)

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டு தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதருதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா
(விடிகின்ற..)

படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மதுமிதா

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை


நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)

கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்
புன்னகை என்னும் பொன்னகையைத்தான்
முகமெங்கும் மீட்டு வைப்பேன்
உங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொத்திப் பொத்தி வைத்து
பழக்கமுமில்லை வழக்கமுமில்லை
மனமொரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம் தான்
வெல்லும் தினம்தான்


என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே


ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே அன்பே ஆருயிரே


படம்: அன்பே ஆருயிரே
இசை/பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி

காலையில் தினமும்

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா
அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே
உன் அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறிது
(காலையில்..)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
(காலையில்...)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் ஐயா
தாலேலோ பாடுவேன் தாயாகி வைத்ததே
நீயாட நீயாட தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச என்னுதோ

அதிகாலை சேவல் கூவும் அது வரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி டாலோ பொன்மனி தாலேலோ
பொன்மனி தாலேலோ பொன்மனி தாலேலோ

படம்: நியூ
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கில்லாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே..)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா ப்ரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
(அன்பே..)

கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மனம் ச்ல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே
அவள் கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே மணியே
அவள் மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிராய் உரையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து
மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
(அன்பே..)

படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்

சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டால் காதல் வந்தால் ஓஓ
கண்ணீர் மட்டும் துணையாகுமே
(ஒரு கல்..)

திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்
காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே
(ஒரு கல்..)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும்
(ஒரு கல்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: அட்னான் சாமி

பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்

குசேலன் - சினிமா சினிமா சினிமா சினிமா

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா
வருமா...

கடவுள் யாரென்று யார் கேட்பா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்
அதுக்கு யார் இங்க சாட்சின்னா
அட வேற யாரு நம்ம தலைவருதான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்தி காட்டுது இந்த சினிமாதான்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

பாரு பாரு படம் ஷூட்டிங் பாரு பலர் வேர்வை சிந்துறாங்க
நூறு கைகள் ஒன்று சேர்ந்து ஒரு சினிமா உருவாக
காப்பி டீயும் தரும் புரோடக்‌ஷன் பாயும் ரொம்ப முக்கியம்தான்
ஷோலிடல்ல பவர் ரைக்டு போட வேணும் உழைக்கும் வர்க்கம்தான்
மேலும் கீழும் என்ன பேதம் பார்க்க இங்கு ஏற்றம் தாழ்வு இல்லை
கோடம்பாக்கம் இங்கு கோவில் ஆச்சு இந்த சினிமா தொழிலாலே
ஏ க்ரூப் டான்ஸு இந்த கோரஸ் பார்ட்டி எல்லா குடும்பம் ஆகும் தப்பா
வந்த பேரும் இங்க வாழ வைக்கும் இந்த சினிமா சினிமாதான் ஹேய்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா
வருமா...

சூப்பர் ஸ்டார்! அதோ பார்..
ராஜயோகம் பண்ண சூப்பர்ஸ்டார் நம்ம ஊருக்கு வந்தாரு
சிங்கம்னா சிங்கம்தான்
மூக்கு மேலே விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமைதானே அவருக்கு வலிமை
தலை கனத்திடாத தலைவன் எங்கள் அண்ணன் மட்டும்தான்
ஜப்பான் போனால் சூப்பர் ஸ்டாரு டென்மார்க் போனால் சூப்பர் ஸ்டாரு
அமேரிக்காவில் சூப்பர் ஸ்டாரு ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
பார்த்த இவனின் பனியன் நீ கவனி பள்ளி பிள்ளை படிப்பில்ல கவனி
சைகரி இருக்கும் பைகளும் பூக்கும் குடையில் கூட சூப்பர் ஸ்டார்
கடவுள் யாரென்று யார் பார்த்தா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்

சூப்பர் ஸ்டார் பேரைப்பார்
திரை மீது மக்கள் பார்க்கும் போது விசில் வானை பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம்தான்
பாலும் தேனும் சேர்ந்து பந்தில் நீடு ஒன்று வாழ்த்த பாடாதோ
அந்த படையப்பாவின் படைதான் இந்த பூமி எங்கும் அணிவகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை அள்ளும் எங்கள் ஒரே மன்னந்தான்
சூப்பர் ஸ்டாரும் சூரியனும்தான்
உலகம் சுற்றி ஒளியும் ஒன்று
இந்த பெருமை யார்க்கும் இல்லை
இங்க எந்த மனிதனுக்கே ஒன்று தமிழா

கடவுள் யாரென்று யார் கேட்பா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்
அதுக்கு யார் இங்க சாட்சின்னா
அட வேற யாரு நம்ம தலைவருதான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்தி காட்டுது இந்த சினிமாதான்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

படம்: குசேலன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

பார்க்காத என்னை பார்க்காத

பார்க்காத என்னை பார்க்காத
குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத
என்னை விட்டு விட்டு தள்ளிப்போகாத
கொடுத்தத திருப்பி நீ கேக்க
காதல் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பார்த்துக் கொள்ள
நடப்பது கூத்துமில்ல
(பார்க்காத,,)

வேணா வேணான்னு நான் இருந்தேன்
நீதாலே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப்புட்ட
கருப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப்புட்ட
என்னுடன் நடந்த என் நிழல் தனியா நடக்கவிட்ட
உள்ள இருந்த என் உசுர வெளியே மிதக்க விட்ட
(பார்க்காத..)

வேணா வேணான்னு நினைக்கலையே
நானுமுன்னை நொறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்தை
நெஞ்சோடு சேத்து வெச்சேன்
தனியா இருந்த வலியை மட்டும்
தனியா அனுபவிச்சேன்
(பார்க்காத..)

பறவையின் சிறகுகள் விரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
கொடுத்தத திருப்பி நீ கேக்க
கடனா கொடுக்கலையே
உனக்கது புரியலையே

படம்: ஆறு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, சுமங்கலி

கந்தசாமி - ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு

போடி போடி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு

போடி போடி

ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே
உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு
ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி
என்ன சுத்தமா போனா நான் சேஃப்

மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ மேயின் ரோடே..

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி
போடி போடி

ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி
என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..

உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி
கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி

நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விட மாட்றியே
நீ படிச்சப் பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஏ ஏ தள்ளிப்போ
என்னை தள்ளிட்டு போ
கொஞ்சம் கூடு
ரொம்ப மூடு
ஐயோ

வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா
ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி
கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா
ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ கிராஃமாறி
ப்ளீஸ் வாயேன் டேக்மாறி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

படம்: கந்தசாமி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: விக்ரம், சுசித்ரா

தோரணை - வா செல்லம் வா வா செல்லம்

வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம் பூச்சி நீதானே
ஆறடி ஆள் தான் செல்லம்
உதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்னே உன்னே பார்க்கணும் பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவுதான் காணணும்
பொசுக்குன்னு புருஷன்ன்னு சொன்னது
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

என் மனச என் மன ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட ஏன் ஆட்டுற
ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான் நம்பாதடி
(வா செல்லம்..)

வானவில்லில் துப்பட்டா வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா
உன் அழகை கல்வெட்டா நான் செதுக்க சொல்லட்டா
பாதையெல்லாம் பூவை நிக்கட்டா

ஊரில் உள்ள மரங்கள் ஒன்னுமே விடாம
உன் பேரை தான் செதுக்கி வைச்சேன்
வச்சேன் நெஞ்சில் வைச்சேன்

என் கனவில் என் கனவில் உன் சித்திரம்
என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்
நூல் விடுறான் நூல் விடுறான் சிக்காதடி
ரீல் விடுறான் என் எதிரில் மாத்தாதடி

இங்கிலாந்து ராணிக்கா இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொல்வேனே
நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே என் பாதி
ராணி மகா ராணி நீ தானே

முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அன்னேரம்
எனக்கு மட்டும் அழகே உன்ன சேர்த்து ரெட்டை புள்ள

ஃபுல் கலரில் ஃபுல் கலரில் படம் காட்டுறான்
ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்
(வா செல்லம்..)

படம்: தோரணை
இசை: மணிஷர்மா
பாடியவர்: உதித் நாராயணன்