Saturday, October 24, 2009

அஞ்சலி அஞ்சலி!

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)

(அஞ்சலி)

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை

(அஞ்சலி)

பூப்போல கண்ணாலேதான் பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடுதான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல்தான்
வண்ணப் பாப்பா அஞ்சலிதான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல்தான்
ஆடிப் பாக்கும் அஞ்சலிதான்
நடந்து நடந்து வரும் பூச்செண்டு
பறந்து பறந்து வரும் பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கைகொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

(அஞ்சலி)


படம் : அஞ்சலி

இசை : இளையராஜா

No comments:

Post a Comment