Saturday, October 24, 2009

கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)

கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்

No comments:

Post a Comment